உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 21, 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

கடலூர் :

            கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 26ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 

         தமிழ்நாட்டில் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட சிறந்த சிற்பக்கலை நுணுக்கங்கள் அடங்கிய பாடல் பெற்ற தலம் பாடலீஸ்வரர் கோவில். இத்திருகோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்ற மகான்கள் வழிபட்ட திருத்தலமாகும். சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட இக்கோவிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் செய்யப்பட்டது. 

           அதன் பின் கடந்த 1917 ஆண்டும், அதனைத்தொடர்ந்து 1973ம் ஆண்டிலும், 1996ம் ஆண்டும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கடலூர் அருள்மிகு பெரியநாயகி சமேத பாடலீஸ்வர் ஆலய வழிபடுவோர் சங்கம் தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பாலு, பொருளாளர் கார்த்திகேயன், கணேசன், லேனா நாகப்பன், பாலதண்டாயுதம், நடராஜன், பாண்டுரங்கன் உள்ளிட்ட வழிபடுவோர் சங்கத்தினர் முயற்சியில் ரூ.1.35 கோடி ரூபாய் செலவில், கோவிலின் பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கருங்கற்கள் பதிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது.

                  இந்து அறநிலையத்துறை சார்பில் ராஜகோபுரம் 8 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோவிலின் தூய்மை கெடாமால் இருக்க மூன்று அடுக்கு தீபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து யாகசாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior