உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 24, 2011

கடலூர் மாவட்டத்தில் 2.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

            சுகாதாரத்துறை சார்பில் கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் முழுவதும் 1,512 மையங்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து போடப்பட்டது. மேலும், மாவட்ட எல்லையோரம், குடிசைப் பகுதிகள், புதியதாக உருவான பகுதிகள், பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் வாழும் பகுதி என 101 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

            கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் கலெக்டர் சீத்தாராமன் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் கமலக்கண்ணன், துணை இயக்குனர் மீரா, கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உடனிருந்தனர். கடலூர் பஸ் நிலையத்தில் அய்யப்பன் எம். எல்.ஏ., துவக்கி வைத்தார். நகராட்சி சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், கமிஷனர் இளங்கோவன், கவுன்சிலர் செல்வி அஞ்சாபுலி, சுகாதார ஆய்வாளர்கள் பத்மநாபன், பாக்கியநாதன் உடனிருந்தனர். 

             மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என 6,048 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 2 லட்சத்து 47 ஆயிரத்து 510 குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று (24ம் தேதி) மற்றும் நாளை (25ம் தேதி) வீடு வீடாகச் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் பிப். 27ம் தேதி நடக்கிறது. 

சிதம்பரம்: 

            நெல்லுக்கடை தெரு மகப்பேறு மருத்துவமனையில் சேர்மன் பவுஜியாபேகம் துவக்கி வைத்தார். கமிஷனர் (பொறுப்பு) மாரியப்பன், சுகாதார ஆய்வாளர் சத்தியசுந்தர், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

நெல்லிக்குப்பம்: 

              சேர்மன் கெய்க்வாட் பாபு துவக்கி வைத்தார். கமிஷனர் புவனேஸ்வரி, சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

விருத்தாசலம்: 

            அரசு மருத்துவமனையில் டாக்டர் கதிர்வேல் தலைமையில் குழந்தைகள் நல மருத்துவர் பார்த்தசாரதி சொட்டு மருந்து போட்டு முகாமை துவக்கி வைத்தார். 

சிறுபாக்கம்: 

             சிறுபாக்கம் பஸ் நிலையத்தில் டாக்டர் உதயகுமார் தலைமையில் ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன் துவக்கி வைத்தார்.

பண்ருட்டி: 

              பஸ் நிலையம் முன்பு ரோட்டரி சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சேர்மன் பச்சையப்பன், துணை சேர்மன் கோதண்டபாணி துவக்கி வைத்தனர். 

சேத்தியாத்தோப்பு: 

            ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரி ஹென்றி டேனியல் தலைமையில் ஜேசீஸ் தலைவர் சேரலாதன் துவக்கி வைத்தார். 

கிள்ளை: 

             பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியப்பகுதி ஊராட்சி கிராமங்களில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாமை அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் துவக்கி வைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior