உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 24, 2011

மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு

கடலூர் : 

            மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளை கல்லூரி முதல்வர் பாராட்டி, பரிசு வழங்கினார். மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. 

             அதில் பங்கேற்ற கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவி ரேவதி 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், தத்தித் தாண்டுதல், தொடர் ஓட்டத்தில் முதலிடமும், 100 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றார். பாக்கியலட்சுமி ஈட்டி எறிதலில் முதலிடம், குண்டு எறிதல், 400 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், வட்டு எறிதலில் மூன்றாமிடம் பெற்றார். சோனியா 400 மீ., இரண்டாமிடம், கலையரசி 400 மீ., ஓட்டத்திலும் சத்யாவதி ஈட்டி எறிதல், சரண்யா 3,000 மீ., ஓட்டத்திலும் மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோரை கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் பாராட்டி பரிசு வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior