
கடலூர் :
குள்ளஞ்சாவடியிலிருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றியினர், மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து, வடலூர் நோக்கி மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குள்ளஞ்சாவடிலியிருந்து அரிசி கடத்திச் சென்ற லாரியை விரட்டிச் சென்று குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலையில் மடக்கிப் பிடித்தனர்.
லாரியில் இருந்த இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். லாரியை சோதனை செய்ததில் 40 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. கடலூர் உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 40மூட்டை ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக