உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 08, 2011

சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

சிதம்பரம் : 

            விடுதிக்கு சாலை வசதி செய்துதரக் கோரி சிதம்பரம் சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 

              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 2,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி உள்ளது. மாணவர்கள் விடுதிக்குச் செல்ல சாலை வசதியில்லாததால் மழைக் காலங்களில் சேறும், சகதியிலும் செல்கின்றனர். மேமலும் கழிப்பிட வசதியுமின்றி அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று விடுதியில் சாலை வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வே ண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் ஒட்டு மொத்தமாக வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior