உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 16, 2011

வாக்காளர் அடையாள அட்டை சட்டசபைத் தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பு

               சட்டசபைத் தேர்தலுக்கு முன், வாக்காளர் அடையாள அட்டை குறைகளை தீர்க்க கடைசி வாய்ப்பாக, வரும் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி குறிப்பு: 

              வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக, வரும் 19, 20 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் ஊரகப் பகுதிகளில் பிர்கா நிலையிலும், நகரப் பகுதிகளில் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நடக்கும். ஊரகப் பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்களும், நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மேலாளர்களும் இதற்கான படிவங்களை பெறுவர். 

              வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடம் மாறுதல் ஆகியவற்றிற்கு முறையே படிவங்கள் 6, 7, 8 ஏ அளிக்கப்படும் விண்ணப்பங்களும் இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும். விண்ணப்பங்களை இரு பிரதிகளாக அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படிவங்கள் பதிவிறக்க 


Application for obtaining duplicate / Replacement EPIC  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior