உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 16, 2011

தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

திட்டக்குடி : 

          தொழுதூர் நாவலர்  நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. நிர்வாக இயக்குனர்கள் ராஜன், ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர். 

             முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி விழா மலரின் முதல் பிரதியை வெளியிட அண்ணாமலைப் பல்கலைக்கழக மின்னியல் துறைத் தலைவர் டாக்டர் வேலுசாமி பெற்றுக் கொண்டார். ஆறுமுகம் கல்வியியல் கல்லூரி முதல்வர் துரை எழிலன் வாழ்த்திப் பேசினார். விழாவில் திருச்சி அண்ணா தொழில் நுட்பக் கல்லூரி, ஜெயராம் கல்லூரி, ஈரோடு ஐ.ஆர்.டி.டி., விழுப்புரம் ஐ.எப்.ஈ.டி., திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கோவை கிருஷ்ணா கல்லூரி, சென்னை எஸ்.எஸ்.என்., உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 250 பேர் பங்கேற்று கருத்துகளை வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior