உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 16, 2011

பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஆன் லைன் முன்பதிவு: ரயில்வே மேலாளருக்கு மனு

திட்டக்குடி : 

            பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஆன் லைன் முன்பதிவு வழங்கக் கோரி ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. 

இது குறித்து திட்டக்குடி வக்கீல்கள் வேல்முருகன், ராதாகிருஷ்ணன், சமூக விழிப்புணர்வுக்குழு செயலர் வக்கீல் பாலகுமார் ஆகியோர் கூட்டாக, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

               பெண்ணாடம் வழியே சென்னை - திருச்சி மார்க்கமாக தினசரி 30க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. இங்குள்ள மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஆன் லைனில் முன்பதிவு செய்ய வேண்டுமானால் 50 கி.மீ., தூரமுள்ள அரியலூர், 35 கி.மீ., தூரமுள்ள விருத்தாசலத்திற்கு செல்கின்றனர். இதனால் திட்டக்குடி பொதுமக்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் உட்பட பல தரப்பினரும் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். பெண்ணாடம் - சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பர்த் சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. 

               இதனை திருச்சி மக்களின் பயன்பாட்டிற்கே, திருச்சி அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். எனவே திட்டக்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய பர்த் சீட்டுகளை மீண்டும் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஆன் லைன் முன்பதிவு வசதியினை ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior