உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 26, 2011

அண்ணாமலை பல்கலைக்கழக நுழைவு தேர்வு விண்ணப்பம் விற்பனை

சிதம்பரம்:
 
              சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2011-12-ம் கல்வி ஆண்டிற்கான பி.இ., பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை), எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்மஸி போன்ற பட்ட படிப்பு வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

               பி.இ., பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை) போன்ற பட்டபடிப்பு வகுப்புகளுக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தின் விலை ரூ.400. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி. (நர்சிங்), பி.பார்மசி போன்ற பட்ட படிப்பு வகுப்புகளுக்கான விண்ணப்பத்தின் விலை ரூ.300 ஆகும்.    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 31-3-2011. பல்கலைக்கழகத்தின் வகுப்புகளில் இந்த கல்வியாண்டில் சேர்ந்து பயில இந்த நுழைவுத்தேர்வு அவசியம் என்றும் இந்த மார்ச் மாதம் பிளஸ்2- தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் கூறினார்.

            மேலும் இந்த விண்ணப்பங்களை வேலை நாட்களில் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பணம் செலுத்தியோ அல்லது தபால் மூலமாகவோ மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior