உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 11, 2011

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எதிர்த்து மோதுவது யார்?


எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
கடலூர்:

          மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை எதிர்ப்பு போட்டியிடுவது. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.வா, ம.தி.மு.க.வா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

              தி.மு.க. அணியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடுவது, பெரும்பாலும் உறுதியாகிவிட்டதாக தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3 முறை குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எம.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தற்போது போட்டியிடப் போவது 4-வது முறை ஆகும். அமைச்சர் என்ற முறையில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை இத்தேர்தலில் எப்படியும் வீழ்த்துவதற்கு அனைத்து திட்டங்களையும், வியூகங்களையும் அ.தி.மு.க. வகுத்து இருப்பதாக அ.தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

            பெரும்பாலான நலதிட்டங்களை குறிஞ்சிப்பாடி தொகுதிக்கே நிறைவேற்றி இருக்கிறார் என்று அ.தி.மு.க. பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறது.அப்படி இருக்கும்போது அமைச்சருக்கு எதிராக, யாரை நிறுத்துவது என்பதில் அ.தி.மு.க. அணியில் தீவிர சிந்தனை எழுந்துள்ளது. கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலருமான எம்.சி.சம்பத் மனு அளித்து இருக்கிறார். 

               எம்.சி. சம்பத் பெரும்பாலும் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதையே அதிகம் விரும்புகிறார், ஆனால் கட்சி மேலிடம் அவரை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்களோ கடலூரில் போட்டியிடுமாறு அறிவுரை கூறுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குறிஞ்சிப்பாடி தொகுதியை ம.தி.மு.க.வுக்குக் கொடுப்பதாக இருந்தால், அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் என்.ராமலிங்கம்தான், அமைச்சருக்குச் சரியான போட்டி வேட்பாளராக இருக்கும் என்று, அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

                 ஆனால் என்.ராமலிங்கமோ குறிஞ்சிப்பாடி தொகுதியில், அமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுவதைத் தவிர்க்க விரும்புவதாகவே அவரது சமூகத்தினரும், அவரது கட்சியினரும் தெரிவிக்கிறார்கள். இதே தொகுதியில் தே.மு.தி.க. விவசாய அணிச் செயலாளராக இருக்கும், ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரும் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான வி.சி. சண்முகமும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்றும், விருப்ப மனுகூடத் தாக்கல் செய்யவில்லை என்றும், அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                  அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவரான சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்து இருக்கிறார். அவரும் நெய்வேலி தொகுதியையே அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் தே.மு.தி.க. சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிட விரும்புவதாலும், பண்ருட்டி தொகுதி கிராமங்கள் பலவும், தொகுதி சீரமைப்பில் நெய்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டு இருப்பதாலும், நெய்வேலி தொகுதியை அவர் விரும்பினால், தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

               அமைச்சர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த கட்சிகள் போட்டியிடுவதும், வலுவான போட்டியாக இருக்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எனவே அமைச்சரை எதிர்த்து, அ.தி.மு.க.வைச் சேர்ந்த வலுவான நபர் அல்லது தேர்தலுக்குப் புதியவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர், அல்லது ம.தி.மு.க. வேட்பாளர் ஒருவர் போட்டியிடக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior