உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 18, 2011

2011-2012-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சியில் சேர இன்று முதல் விண்ணப்பம்

           2011-2012-ம் கல்வி ஆண்டில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன.

           விண்ணப்ப படிவங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் (டயட்), அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு ஜுன் மாதம் 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior