உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 18, 2011

2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

கடலூர் : 

              கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மழையின் காரணமாக சேதமடைந்த 180 மீட்டர் மதில் சுவரை கட்டுவதற்கு 2.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

                 கடலூர் அண்ணா விளையாட்டு அருகில் வடக்கு பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு உள்ள மதில் சுவர்கள் இடித்து விழுந்து சேதமடைந்தது. இதே போன்று கடந்த மழையின் போது கலெக்டர் அலுவலகம் சாலை பகுதியில் உள்ள மதில் சுவர் அருகே இருந்த பிரமாண்ட மரம் முறிந்து விழுந்ததால் மதில் சுவர் சேதமடைந்தது. இதனால் அண்ணா விளையாட்டரங்கில் பாதுகாப்பு இல்லாமலும், கால்நடைகள் மைதானத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 180 மீட்டர் தூரத்திற்கு சேதடைந்துள்ள சுற்றுச்சுவரை புதிதாக கட்ட 2.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்க உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior