உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 18, 2011

நவரத்னா தகுதியால் என்.எல்.சி.க்கு தன்னாட்சி அதிகாரம் அதிகரிப்பு: ஏ.ஆர்.அன்சாரி




செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி (வலமிருந்து 3-வது). உடன் (இடமிருந்து) இயக்குநர்கள் எஸ்.கே.ஆச்சார்யா, ஆர்.கந்தசாமி
 
நெய்வேலி:
 
            என்.எல்.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு நவரத்னா அந்தஸ்து வழங்கியுள்ளதால், இந் நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.  
 
 நெய்வேலியில் என்.எல்.சி. லைவர் ஏ.ஆர்.அன்சாரி கூறியது:  
 
                என்.எல்.சி. நிறுவனம் மினி ரத்னா என்ற தகுதியிலிருந்து தற்போது நவரத்னா என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இது எங்களது செயல்பாட்டுக்கு கிடைத்த கெüரவமாக கருதுகிறோம். மத்திய அரசு வழங்கியுள்ள இப் பதக்கம் எங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்.  இத்தகைய தகுதியை பெற நிறுவனத் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் எனது சக இயக்குநர்களும் காரணமாவர்.  2008-ம் ஆண்டு இந்நிறுவனத் தலைவராக நான் பொறுப்பேற்கும் போது, 3 இலக்குகளை மையமாக வைத்து செயல்படுவோம் என்று கூறினேன்.
 
              அதன்படி இந்நிறுவனத்தின் மின்னுற்பத்தித் திறனை 2,490 மெகவாட்டிலிருந்து 10 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்துவது, மினி ரத்னா தகுதியிலிருந்து நவரத்னா தகுதியை எட்டுவது, மாற்று மின்னுற்பத்தி திறன்களில் ஈடுபடுவது என கூறியிருந்தேன்.  அதன்படி அடுத்த ஆண்டு 10 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் பணி தொடங்கவுள்ளது.  தற்போது நவரத்னா என்ற தகுதியை எட்டியிருக்கிறோம். அடுத்ததாக மாற்று மின் சக்தி உற்பத்தியை தொடங்க இடம் தேர்வு செய்துள்ளோம். அது விரைவில் முடிவடையும் என்றார். 
 
                நெய்வேலியில் தற்போது கட்டுமானம் நடைபெறும் 2-ம் அனல் மின் நிலை விரிவாக்கத்தில் 250 மெகாவாட் மின்னுற்பத்தி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. எஞ்சிய 250 மெகா வாட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். நிறுவனத்தின் நிதிநிலையும் நல்ல நிலையில் உள்ளதால் புதிய திட்டங்கள் விரைவில் நிறைவேற வாய்ப்புண்டு.  மாநில அரசுக்கு தற்போது 1,000 மெகா வாட் மின்சாரம் தடையின்றி வழங்கிக் கொண்டிருக்கிறோம். புதிய மின் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
 
            இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. பத்திரிகைகளின் பலம் என்ன என்பதை அனைவரும் அறிவோம். எனவே ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஏ.ஆர்.அன்சாரி கேட்டுகொண்டார்.  பேட்டியின் போது என்.எல்.சி. இயக்குநர்கள் பி.சுரேந்திரமோகன், ஆர்.கந்தசாமி, கே.சேகர், ஜே.மகிழ்செல்வன் மற்றும் எஸ்.கே.ஆச்சார்யா ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior