உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 18, 2011

பண்ருட்டியில் நகைக்கடை உரிமையாளர் மர்ம மரணம்; நகை பணம் கொள்ளை

பண்ருட்டி:

               பண்ருட்டி -  ராஜாஜி சாலையில் உள்ள ஸ்ரீ கணேஷ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர் சண்முகம் செட்டியார். வயது 76. இவர் அந்தப் பகுதியில் பணப் பரிவர்த்தனைகளிலும் ஈடுபடுபவர். அடகுக்கடை உரிமையாளரான அவர், வீட்டின் மாடியில் தூங்குவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை, அவர் மர்மமான முறையில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். வீட்டில் முக்கிய அறையில் அடகு நகைகள், பணம் முதலியவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பாராம். அந்தப் பெட்டகங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை போயுள்ளன. கொள்ளை போன நகைகளின் மதிப்பு பெருமளவில் இருக்கும் என்கின்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior