உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 01, 2011

பிளஸ் 2 பொது கல்வி தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் 2ம் ஆண்டில் நேரடியாக சேரலாம்

கடலூர் : 

             பிளஸ் 2 பொதுப்பாட பிரிவு தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம் என கடலூர் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் ரவி தெரிவித்துள்ளார். 

இது குறித்து கடலூர் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி விடுத்துள்ள அறிக்கை: 

           பிளஸ் 2வில் தொழிற்கல்வி மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக்கில் சேரலாம் என ஏ.ஐ.சி.டி.இ., ஆணை பிறப்பித்திருந்தது. இதனால் பிளஸ் 2 பொது பொதுக்கல்வி (இயற்பியல், வேதியியல், கணிதம்) தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கை பெற முடியாத நிலை இருந்தது. தமிழக அரசு தற்போது ஏ.ஐ.சி.டி.இ.,கேட்டுக் கொண்டதன் பேரில் தற்போது பிளஸ் 2 பொது கல்வி (இயற்பியல், வேதியியல், கணிதம்) தேர்ச்சி பெற்றவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம் என பரிந்துரை செய்து கடந்த 28-05-2011ம் தேதி அரசு உத்தரவிட்டுள்ளது. 

            அதன் படி பிளஸ் 2 பொதுக் கல்வி மற்றும் பிளஸ் 2வில் தொழிற்கல்வி மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவரும் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக்கில் சேரலாம். இவ்வாறு ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் ரவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior