உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 01, 2011

கடலூர் தேவனாம்பட்டினத்தில் வலையில் சிக்கிய பெண் மயில் சாவு





கடலூரில் காகங்களின் தாக்குதலில் இருந்து, மீட்கப்பட்ட பெண் மயில்.


கடலூர்: 

           கடலூர் தேவனாம்பட்டினத்தில், வயலில் போடப்பட்டிருந்த வலையில் சிக்கிய பெண் மயில், பரிதாபமாக இறந்தது. 

           கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பூபதி, தன் வயலில், வெங்காயம் பயிர் செய்திருந்தார். வயலில் கோழிகள் புகுந்து பயிரை அழிப்பதால், வயலைச் சுற்றி வலை கட்டியிருந்தார். நேற்று காலை அவ்வழியாகச் சென்ற வாலிபர், பாலாஜி வயலில் இருந்து வந்த வித்தியாசமான சத்தத்தைக் கேட்டு அருகில் சென்று பார்த்த போது, வலையில் மயில் சிக்கியிருந்தது தெரிந்தது. உடன் மயிலை மீட்டு, தேவனாம்பட்டினம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், வனத்துறையிடம் மயிலை ஒப்படைத்தனர். மயிலுக்கு சிகிச்சை அளித்து காப்புக்காட்டில் விட முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே, மயில் பரிதாபமாக இறந்தது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior