உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 27, 2011

காவிரி டெல்டா பாசனத்திற்கு கீழணையில் 29ல் தண்ணீர் திறப்பு

காட்டுமன்னார்கோவில் :

           காவிரி டெல்டா பாசனத்திற்கு, கீழணையில் இருந்து, வரும் 29ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடலூர், நாகை, தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா பாசனத்திற்கு, மேட்டூரில் இருந்து, கடந்த 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர், கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டது. கீழணை வந்து சேர்ந்த தண்ணீர், தற்போது கீழணையின் மொத்தம் உள்ள, 9 அடியில், 3 அடிக்கு தேங்கியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

           கீழணைக்கு தண்ணீர் வந்ததைத் தொடர்ந்து, கடந்த 18ம் தேதி வடவாறு வழியாக வீராணத்திற்கு குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வடவாற்றங்கரை விவசாயிகள், குறுவை சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மூன்று மாவட்ட பாசனத்திற்காக, கீழணையில், வரும் 29ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. கீழணையில் இருந்து வீராணத்திற்கு வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, ஏரிக்கு வினாடிக்கு 500 கன அடி வரை தண்ணீர் வருவதால், வறண்டு கிடந்த வீராணத்தில் தண்ணீர் தேங்க துவங்கியுள்ளது.

            கந்தகுமாரன் மதகு வரை தண்ணீர் வந்து விட்டது. வரும் 29ம் தேதி கீழணையில் தண்ணீர் திறந்துக்கப்படுவதால், அதிக அளவு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீராணத்தில் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior