உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 27, 2011

ஆன்-லைனில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்கள்

        மக்களுக்கு எளிதாக, விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க, சரிபார்ப்பு விண்ணப்பங்களை தபாலில் அனுப்புவதற்கு பதில், ஆன்-லைனில் அனுப்புமாறு போலீசாருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. 

           மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் பாஸ்போர்ட் கிடைக்கும் வகையில், மதுரை கோச்சடையில் ஜூன் 30 முதல், தனியார் பங்களிப்புடன் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படவுள்ளது. மதுரை பாரதி உலா ரோட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த பின், அவை சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி., அலுவலக பாஸ்போர்ட் பிரிவுக்கு வரும்.

            வீட்டு முகவரி, விண்ணப்பத்தாரர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, சம்பந்தப்பட்ட ஸ்டேஷனிற்கு அவை அனுப்பப்படும். ஆய்வுக்கு பின், பாஸ்போர்ட் பிரிவுக்கு அனுப்பப்படும். அந்த விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்புவர். இந்த நடைமுறையால், பாஸ்போர்ட் கிடைக்க குறைந்தது இரு வாரங்களாகும்.


          இதை தவிர்க்க, பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படுகிறது. இனி, போலீசாரால் ஆய்வு செய்த விண்ணப்பங்களை, தபாலில் அனுப்பாமல், ஆன்-லைனில் கேட்கப்படும் விபரங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்து அனுப்புமாறு போலீசாருக்கு பாஸ்போர்ட் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த புதிய முறை ஜூன் 30ல் அமலாகிறது. இதன் காரணமாக, ஒருவாரத்திற்குள் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். 




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior