உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 11, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி மைலம் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல்துறையும், புதுச்சேரி புதுச்சேரி மைலம் இந்தியா லிமிடெட் நிறுவனமும் வெல்டிங் துறையில் முழு ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொகை வழங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

                  அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புலத்தில் உள்ள உற்பத்தியியல்துறை சார்ந்த உலோகங்கள் இணைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கழகம், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகிய அமைப்புகள் இந்த மையத்தின் ஆராய்ச்சிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 6 கோடி நிதிஉதவி செய்துள்ளன.

             தற்போது வெல்டிங் எலக்ட்ரோட் உற்பத்தி செய்யும் புதுச்சேரி மைலம் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்துடன் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப்பல்கலைக்கழக கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, புதுச்சேரி மைலம் இந்தியா லிட் நிறுவன உரிமையாளர் சிவகுருநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு கோப்புகளை பரிமாறிக்கொண்டனர். 

               இந்த ஒப்பந்தத்தின் மூலம் மைலம் இந்திய ரிசர்ச் ஃபெலோஷிப் உதவித்தொகை பெற ஆண்டு தோறும் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தெடுக்கப்படும் மாணவருக்கு முதல் வருடத்தில் மாதம் ரூ. 18ஆயிரமும், இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ. 20ஆயிரமும், மூன்றாவது வருடத்தில் மாதம் ரூ.22 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும். இதுதவிர ஆண்டு தோறும் இதர செலவுகளுக்காக ரூ. 50ஆயிரம் வழங்கப்படும். 

                      இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தொழில்துறை சார்ந்த வெல்டி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிக்கான அனைத்து நிதிஉதவிகளையும் நிதிஉதவியை மைலம் இந்தியா நிறுவனமும், ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அண்ணாமலைப் பல்கலை வழங்கும். உற்பத்தி பொறியியல், உலோக பொறியியல், உலோக இணைப்பு பொறியியல் முதுநிலைப்பட்டம் பெற்று முழுநேர முனைவர் (Ph.D) பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். 

                இந்நிகழ்ச்சியில் பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன், உற்பத்தியியல் துறைத்தலைவர் முனைவர் ரகுகாந்தன், உற்பத்தியியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன், மைலம் இந்தியா லிட் நிறுவன இயக்குநர் பென்னத்தூர், ஆலோசகர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior