உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 28, 2011

தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தமிழகத்தில் 18 மாதங்களில் நிறைவடையும்

             http://www.gigathoughts.com/wp-content/uploads/2009/06/mnic_prototype.jpg
                                  தேசிய அடையாள அட்டை மாதிரி 


              தமிழகத்தில், அடுத்த 18 மாதங்களில், அனைவருக்கும் அடையாள எண் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகள், முழுவீச்சில் நடக்கின்றன. இதை முன்னிட்டு, மூன்று மாவட்டங்களில், தேர்வு செய்த கிராமங்களில், அடையாள எண் வழங்கும் பணி முடிந்து, 12.50 லட்சம் பேருக்கு, விரைவில் அடையாள எண் அளிக்கப்படுகிறது.

          தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த நிலையில், அடையாள எண் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இப்பணியில் ஈடுபட்டுள்ளது.

            மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தயார் செய்யப்பட்ட, தேசிய மக்கள் தொகை பதிவேட்டைக் கொண்டு, அடையாள எண் தயாரிப்புக்கான பணிகள் நடக்கின்றன. கடலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் உள்ள குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருமயம் தாலுகாக்களில் உள்ள, சில கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராம மக்களிடம், அடையாள எண் வழங்குவதற்கான தகவல்கள், சேகரிக்கப்படுகின்றன.

            அடையாள எண் வழங்கும் பணியில், 70 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அடையாள எண் வழங்கும் குழு, கிராமங்களில் முகாம்களை அமைத்துள்ளன. இம்முகாம்கள், ஓட்டுச் சாவடி போல் இயங்குகின்றன. இங்கு, பொதுமக்கள் அழைக்கப்பட்டு, அவர்களின் புகைப்படம் எடுக்கப்படுகிறது. இது தவிர, இரு கைகளின், கட்டை விரல் தவிர்த்து நான்கு விரல்களின் பிரதி எடுக்கப்படுகிறது. கட்டை விரல் பிரதி தனியாக எடுக்கப்படுகிறது. புகைப்படம் மற்றும் விரல்களின் பிரதிகளுடன், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள தனிநபர் விவரங்களை, டேட்டா என்ட்ரியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அதற்கு, 12 இலக்க எண் வழங்குகின்றனர். இந்த எண்ணே அடையாள எண் ஆகும்.

          குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருமயம் தாலுகாக்களில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் நடந்தது போல, 229 கடலோர கிராமங்களில், அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, 12.50 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக அடையாள எண் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர், கோபால கிருஷ்ணன் கூறியது 

            "தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், மாதிரிப் பணியாக அடையாள எண் வழங்கும் பணி முடிந்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. அடுத்த 18 மாதங்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடையாள எண் வழங்கும் பணி முடிவடையும்' என்றார். அடையாள எண் வழங்கும் பணிக்கு, கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தாலுகாவுக்கு தாசில்தார் மற்றும் மாவட்டத்துக்கு கலெக்டர் பதிவு அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். மாநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அடையாள எண் வழங்கும் பணிக்கு, விரைவில் தனிக் குழுக்கள் நியமிக்கப்பட உள்ளன.


இனியெல்லாம் எண்...! 

       அடையாள எண் வழங்கப்பட்ட பின், தனி நபரின் பெயரை விட, அடையாள எண்ணே முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நபருக்குரிய அடையாள எண்ணை, கம்ப்யூட்டரில் பதிவு செய்தால், 

அவரின் புகைப்படம், 
பெயர், 
தந்தை பெயர், 
முகவரி, 
கல்வித் தகுதி, 
வேலை, 
திருமணம் ஆனவரானால், அவரின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். 

         புகைப்படம், அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டையே, ஒரு நபரின் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை எங்கிருந்தாலும், ஒரு நபரின் விவரங்களை, அடையாள எண் மூலம் அறிய முடியும்.





 விபரங்களுக்கு 


http://uidai.gov.in/







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior