உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 28, 2011

கடலூர் கல்வி மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக இளம் வயதில் உடல் உறுப்புக் கோளாறுகளை சரிசெய்யும் முன்னோடி திட்டம்

கடலூர்:

                  இளம் வயதில் மாணவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் சிறுசிறு கோளாறுகளை, ஃபிசியோதெரபி மூலம் சரிசெய்யும் வகையில் முன்னோடி திட்டம், இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.  

                ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் புதன்கிழமை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இத் திட்டத்தில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.  சிறுவயது மாணவர்களுக்கு விளையாடும்போதும், ஏனையச் செயல்பாடுகளின் போதும், தசைப் பிடிப்பு, தசை சுருக்கம், மூட்டு பாதிப்பு, ஏதேனும் காயங்கள் ஏற்பட்ட பின், தசைப் பிடிப்பால் ஏற்படும் பாதிப்புகள், முதுகு கூன் விழுதல், கைகால்கள் வலுவிழத்தல், உடல் பருமன், தட்டைக்கால் போன்ற பல உடற்கோளாறுகள் ஏற்படுகின்றன.  இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பிற்காலத்தில் நிரந்த உடற் கோளாறுகளாக மாறிவிடுன்றன. 

               இளம் வயதிலேயே இவற்றைக் கண்டுபிடித்து ஃபிசியோதெரப்பி மற்றும் முறையான பயிற்சி செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும்.  இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளான மாணவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலத்தில் கல்வி மாவட்டத்தல் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், உடல் உறுப்புகளில் கோளாறு உள்ள மாணவர்களைக் கண்டறியும் முகாம் புதன்கிழமை நடந்தது. கடலூரில் நடந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தொடங்கி வைத்தார். 

              மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, மாவட்டக் கல்விó அலுவலர் பாரதமணி, பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் 15 ஃபிசியோதெரபி மருத்துவர்கள், மாணவர்களிடையே உடல் உறுப்புக் கோளாறுகள் தொடர்பான பல்வேறு மருத்துவச் சோதனைகளை மேற்கொண்டனர்.   455 மாணவர்களைப் பரிசோதித்ததில், 300 மாணவர்களுக்கு இத்தகைய குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. விருத்தாசலத்தில் நடந்த முகாமில் 561 மாணவர்கள் பரிசோதிக்கப் பட்டதில் 126 மானவர்களுக்குக் குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  


                இதுகுறித்த அறிக்கை கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அறிக்கையைப் பரிசீலித்து, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, உடல் உறுப்புக் கோளாறுகள் தொடர்பாக, முறையான பிசியோதெரபி சிகிச்சை அளிப்பது குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior