உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 20, 2011

குரூப் 2 தேர்வுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு வருகிறது

           ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு வருகிற 30 ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு வருகிறது. தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்து, தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

              25 ந் தேதிக்குள் ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பம் அனுப்பியதற்கான அஞ்சல் ரசீது, விண்ணப்ப எண் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் தங்களின் அடையாள சான்று ஆகியவற்றுடன் அந்தந்த மாவட்ட வருவாய் அதிகாரியை (டி.ஆர்.ஓ.) அணுகலாம். சென்னை மையத்தைச் சேர்ந்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior