உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 20, 2011

மத்திய அரசின் சிறந்த இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :

        மத்திய அரசின் சிறந்த இளைஞர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து நேரு யுவக்கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி விடுத்துள்ள அறிக்கை:

            மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவக்கேந்திரா மூலம் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கவரவித்து வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டவர், மாநில விருதுக்கு பரிசீலிக்கப்படுவர். கடந்த மார்ச் 31ம் தேதி அன்று 35 வயதிற்குட்பட்ட, சிறப்பாக சேவை புரிந்தவர்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் 

                 கடலூர், புதுப்பாளையம், ராமதாஸ் தெருவில் இயங்கி வரும் நேரு யுவக்கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior