
கடலூர்:
குறிஞ்சிப்பாடி தொகுதியில் உள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம், சதானந்தம் ஆகியோர் வீடுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினார். இவருடன் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், ஊராட்சி செயலாளர் மாயவேல், வெள்ளகரை நாகப்பன், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், கிளை கழக செயலாளர்கள் மோகன், சடகோபன், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக