உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 02, 2011

கடலூரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: 59 கிலோ எடை கொண்ட மெகா லட்டு தயாரிப்பு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வியாழக்கிழமை கடலூர் திருப்பாப்புலியூர் சங்கரநாயுடு தெருவில் இனிப்புக் கடை ஒன்றில் வைக்கப்பட்டு இருக்கும் 59 கிலோ லட்டு
கடலூர்,:
 
           விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடலூரில் இனிப்புக் கடை ஒன்றில், 59 கிலோ எடை கொண்ட மெகா லட்டு தயாரித்து வைக்கப்பட்டு உள்ளது.
 
               கடலூர் திருப்பாப்புலியூர் சங்கரநாயுடு தெருவில், இனிப்புப் பலகாரக் கடை வைத்து இருப்பவர்கள் ரமேஷ், விஜய், விநய் சகோதரர்கள். அவர்கள் தங்கள் கடையில் இந்த மெகா லட்டுவைத் தயாரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து உள்ளனர்.இந்த மெகா லட்டு 20 கிலோ சர்க்கரை, 15 கிலோ நெய், 15 கிலோ கடலை மாவு மற்றும் ஏலக்காய், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. 
 
              8 தொழிலாளர்கள் இந்த மெகா லட்டுவை 2 நாள்களில் தயாரித்து உள்ளனர்.9 ஆண்டுகளுக்கு முன், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 50 கிலோ எடை கொண்ட லட்டுவைத் தயாரித்த ரமேஷ் சகோதரர்கள், ஆண்டுக்கு ஒரு கிலோ வீதம் எடையை அதிகரித்து வந்து, இவ்வாண்டு 59 கிலோ லட்டுவைத் தயாரித்து உள்ளனர். விநாயகரைப் பூஜிக்கும் பக்தியுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மெகாலட்டு, விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நாளில், பொதுமக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் என்றும் ரமேஷ் சகோதரர்கள் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior