உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 17, 2011

திட்டக்குடியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/3849d3e8-db76-492f-9082-ccd638d36695_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
               திட்டக்குடியில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமில் துணை சூப்பிரண்டு பேசும் போது விபத்துகளே இல்லாமல் வாகனங்களை ஓட்டவேண்டும் எனற உறுதி மொழியை ஒவ்வொரு ஓட்டுனரும் எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
 
              திட்டக்குடியில் காவல் துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். தாலுகா அலுவலகம் முன்பு மெயின் ரோட்டில் சென்ற இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் மீது முன்புற விளக்குகளில் கருப்பு நிறஸ்டிக்கர்கள் ஒட்டபட்டன. அதேபோல் டியர் வண்டி, மாட்டுவண்டிகளில் சிவப்பு நிற ரிப்லக்டர்கள் பொறுத்தப்பட்டன. துணை சூப்பிரண்டு வனிதா தலைமையில் காவல் துறையினர் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்தபணியை மேற்கொண்டனர். 
 
அப்போது துணை சூப்பிரண்டு வனிதா வாகன ஓட்டுனர்களிடம் பேசியது:-
 
         வாகன விபத்துகளில் வாகன சேதம் ஒருபக்கம் இருந்தாலும். இதில் ஏற்படும் உயிர் இழப்புகள் ஒரு குடும்பத்தையே பாதிப்பதுடன் அந்த குடும்பம் சரியான வழிகாட்டுதல் இன்றி பொருளாதார பின்னடைவு ஏற்படுத்துகின்றன. எனவே ஒவ்வொரு ஓட்டுனரும் புதிய வாகனங்கள் வாங்கும் போதும் ஓட்டும்போதும் விபத்துகளே இல்லாமல் வாகனங்களை ஓட்டவேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior