உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 17, 2011

கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியல் போராட்டம்

கடலூர்:'

             கடலூரில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 82 பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். 

              விலைவாசி உயர்வைக் கண்டித்தும், சேமிப்புக் கிடங்குகளில் முடங்கிக் கிடக்கும் தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை 3 பிரிவாக பிரிக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ரேஷன் பொருள்களுக்குப் பதில் பணமாகத் தரும் ஆலோசனையைக் கைவிட வேண்டும் என்று கோரியும் மறியல் போராட்டம், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்தது. 

                 கடலூர் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் பி.ஜான்ஸி ராணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எஸ்.லட்சுமி, என்.ஆனந்தி, ஏ.ரஜியாபேகம், கே.அன்புச்செல்வி உள்ளிடடோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வி.மேரி, மாவட்டத் தலைவர் ஆர்.சிவகாமி, பொருளாளர் பி.தேன்மொழி, துணைச் செயலாளர் எம்.ஜெயசித்ரா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மறியலில் ஈடுபட்ட 82 பெண்களை போலீஸôர் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior