உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 03, 2011

கடலூர் நகராட்சித் தலைவர் பதவி: 13 வேட்பு மனுக்கள் ஏற்பு

கடலூர்:

          கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்த, 13 வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டன.  

கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு

சி.கே.சுப்பிரணியன் (அ.தி.மு.க.), 
கே.எஸ். ராஜா (தி.மு.க.), 
செ.தனசேகரன் (மார்க்சிஸ்ட்), 
சந்திரசேகரன் (காங்கிரஸ்), 
செல்வம் (பா.ஜ.க.), 
ஏ.கே.சேகர் (ம.தி.மு.க.), 
தாமரைச் செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்) 

            உள்ளிட்ட 13 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து இருந்தனர்.   நகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் 13 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.  இந்த நகராட்சியில் 45 வார்டுகளுக்கு மொத்தம் 298 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. வேட்பு மனுக்கள் பரிசீலனை இரவு 7 மணிக்கு மேலும் நீடித்தது. அப்போது 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior