உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 03, 2011

பண்ருட்டி நகரம், ஒன்றியத்தில் மனுக்கள் பரிசீலனை : 3,541 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர்

பண்ருட்டி:

            வேட்பாளர் மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில் பண்ருட்டி நகராட்சி, பண்ருட்டி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், தொரப்பாடி பேரூராட்சி பகுதியில் 3,541 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பண்ருட்டி நகராட்சி: 

             பண்ருட்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். சனிக்கிழமை இருவர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து 12 பேர் களத்தில் உள்ளனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு 239 பேர் மனு செய்ததில் வேட்பு மனு பரிசீலனையின் போது 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சனிக்கிழமை 23 பேர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து 211 களத்தில் உள்ளனர்.

தொரப்பாடி பேரூராட்சி: 

            தொரப்பாடி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு 8 பேர் மனு செய்தனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 57 பேரில் 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 49 பேர் களத்தில் உள்ளனர்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்: 

           பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 32 பேர் மனு தாக்கல் செய்ததில், 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனு செய்த 201 பேரில் பரிசீலனையின் போது 5 தள்ளுபடி செய்யப்பட்டது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு 244 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 4 தள்ளுபடி செய்யப்பட்டது. வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,138 பேர் மனு தாக்கல் செய்ததில், 15 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு களத்தில் 1,123 பேர் உள்ளனர்.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்: 

             அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 18 பேர் மனு தாக்கல் செய்தனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனு செய்த 161 பேரில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு 318 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 1177 பேரில், 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு களத்தில் 1,169 பேர் உள்ளனர்

              .வெள்ளிக்கிழமை வேட்பு மனு பரிசீலனை முடிந்த நிலையில் பண்ருட்டி நகராட்சி, பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், தொரப்பாடி பேரூராட்சி ஆகியவற்றில் 3,541 பேர் களத்தில் உள்ளனர். இதில் மேலும் பலர் அக்டோபர் 3-ம் தேதி வாபஸ் பெறுவர் என எதிர்பாக்கப்படுகிறது.












0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior