உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 03, 2011

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள்; மாவட்டந்தோறும் இலவச தொலைபேசி எண்கள்

          மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டால் அதுகுறித்து விளக்கங்கள் பெற மாவட்டந்தோறும் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

            இந்த விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணியிடங்களை நிரப்பும் பணியில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, குரூப் 1, குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் போன்ற பதவிகளுக்கான தேர்வு முக்கியமானது. இவ்வாறு தேர்வுகளை நடத்தும் போது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாமை, தேர்வுகள் குறித்த சந்தேகங்கள் போன்றவை தேர்வர்களுக்கு ஏற்படும். 

               இந்தச் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள தேர்வர்களும் சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தையே நாட வேண்டிய சூழல் இருந்து வந்தது.தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக மட்டுமே மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தேர்வர்களின் சந்தேகங்கள் போக்கப்படும். இந்த நிலையில், மாவட்டந்தோறும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்த பணிகள் நடைபெறும் அரசுத் துறையின் பிரிவுகளிலேயே சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

            32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களில் எந்தெந்தப் பிரிவுகளில் தேர்வாணையப் பணிகள் நடைபெறும் எனவும், அதற்கான தொலைபேசி எண்கள் எவை என்பது குறித்த விவரங்களும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படும் இணையதளம்: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பல்வேறு புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலத் துறை அலுவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் அண்மையில் நடைபெற்றன.

               இந்தத் தேர்வுகளுக்கான விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. "ஏ பிரிவு' கேள்வித் தாளுக்கு ஒரு நாளிலும், அதற்கு அடுத்த நாளில் பி,சி,டி என மூன்று பிரிவுகளுக்கான கேள்வித் தாள்களுக்கான விடைகளும் வெளியிடப்பட்டுள்ளன.தாற்காலிகமாக வெளியிடப்பட்டுள்ள இந்த விடைகள் மீது சந்தேகங்கள், திருத்தங்கள் இருந்தால் அக்டோபர் 7-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். அதன்பிறகு, இறுதி செய்யப்பட்ட விடைகளின் பட்டியல் வெளியாகும்.

மகாராஷ்டிரம் முன்மாதிரி:

         பணியாளர் தேர்வாணைய இணயைதளங்களில் முன்மாதிரி இணையதளமாக விளங்குவது மகாராஷ்டிர மாநிலத்தின் இணையதளமாகும். இந்த இணையதளத்தில் தேர்வுகளுக்கான விடைகள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்துள்ளன.மகாராஷ்டிர மாநிலத்தைப் பின்பற்றி இப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருவது தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 


More Details 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior