உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 03, 2011

கடலூர் மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் நியமனம்

கடலூர் : 

           உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரா பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

                   கடலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக தமிழக அரசின் பதிவுத்துறையின் தலைவராக பணிபுரிந்து வரும் தர்மேந்திரா பிரதாப்யாதவ் மாநிலதேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று தேர்தல் பணி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அமுதவல்லி, எஸ்.பி., பகலவன், திட்ட இயக்குனர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், வாக்காளர்கள் பட்டியல் மனு தாக்கல், மாவட்டத்தில் உள்ள பதட்டமான ஓட்டுச் சாவடிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

               கடலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளரை 94897 00399 என்ற மொபைல் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகர் ஏதுமிருப்பின் 18004257019 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை உபயோகித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior