உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 03, 2011

கடலூருக்கு புதுவையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் கடத்தல்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/92c1d7f2-8a39-48bd-b5de-9e601b832222_S_secvpf.gif
 
கடலூர்:

             உள்ளாட்சி தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  

               அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு காரின் டிரைவர் போலீசார் சோதனை நடத்துவதை கண்டதும் காரை திடீரென நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தப்பி ஓடிய அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் தென்பெண்ணையாற்றில் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

            இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் ஓட்டி வந்த காரை திறந்து சோதனையிட்டனர். அப்போது காரின் இருக்கை பகுதியிலும், காரின் டிக்கி பகுதியிலும் பெட்டி, பெட்டியாக பிராந்தி பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 40 அட்டை பெட்டிகளில் 2 ஆயிரம் குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் அதில் இருந்தது.

              இந்த பிராந்தி பாடடில்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய புதுவையில் இருந்து கடலூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. பிராந்தி பாட்டில்கள் மற்றும் காரின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.   இதையடுத்து பிராந்தி பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்து போலீசார்  கடலூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபரையும் தேடி வருகிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior