உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 24, 2011

நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சர்வதேச தொழுநோய் மையத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர்

நெய்வேலி :

           நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சர்வதேச தொழுநோய் மையத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த 137 ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்கு சேவை செய்து வரும் 'லெப்ரஸி மிஷன் இன்டர்நேஷனல்' எனும் சர்வதேச தொழுநோய் தொண்டு மையம் பள்ளி மாணவர்களுக்கு சமூக சேவையில் வாய்ப்பளிக்கும் வகையில்'ஓர் உயிரை காப்பாற்று' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
 
          இத்திட்டத்தின் மூலம் தொழுநோயாளிகளுக்கு உதவும் வகையில், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் ஊக்கமளித்ததன் காரணமாக இப் பள்ளி மாணவ, மாணவிகள் தொண்டு நிறுவனத்திற்காக 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர். நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, மாணவர்கள் திரட்டிய நிதிக்கான காசோலையை தொழுநோய் தொண்டு மைய மேலாளர் பிராங்க்ளின் மில்டனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் நெய்வேலி ஜவகர் கல்விக் கழக தலைமை நிர்வாகிகள் ராமலிங்கம், கமலநயணன், மோகன், ஜார்ஜ் ஜேக்கப், ஜவகர் பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior