உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 24, 2011

மங்களூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 66 ஊராட்சித் தலைவர்கள்

திட்டக்குடி :

           மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளுக்கான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சி தலைவர்களுக்கான தேர்தல் முடிந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
          இதில் கீழ்ஒரத்தூர், ஆக்கனூர், நிதிநத்தம், நாவலூர் ஊராட்சிகளுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மங்களூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கழுதூர் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி ஆயிரத்து 783 ஓட்டுகள் பெற்று ஆயிரத்து 184 ஓட்டுகள் வித்தியாசத்தில் நல்லூர் ஒன்றியத்தில் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புலிவலம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி 3 ஓட்டுகள் அதிகம் பெற்று நல்லூர் ஒன்றியத்தில் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior