உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 11, 2011

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி . 750 மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள்

கடலூர்:

            மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா கடலூரில் வியாழக்கிழமை நடந்தது.  கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு குவைத் பொங்குதமிழ் மன்றம், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை ஆகியன ஏற்பாடு செய்திருந்தன. 750 மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சிக்கு கடலூர் தமிழ்ச் சங்கத் தலைவரும் உலக திருக்குறள் பேரவை கடலூர் மாவட்டச் செயலாளருமான ராம.சனார்த்தனன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். சேதுமாதவன் வரவேற்றார். முனைவர் இளங்கோவன் விளக்க உரை நிகழ்த்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம் நன்றி கூறினார்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior