
திட்டக்குடி:
தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம்வகுப்பு படிக்கும் 247 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டன. விழாவிற்குபள்ளி தலைமை ஆசிரியர் விசுவநாதன் தலைமைதாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.எஸ். ஆர்.தங்கராசு, பொருளாளர் ஞானசேகரன் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மருதைமணிஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் நீதிமன்னன் சைக்கிள்களை வழங்கி பேசியதாவது.
கடந்ததடவை ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்தபோது வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத வகையில் இந்தியாவிலேயே முதல்தடவையாக மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். கிராமபுற மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை இருந்த போதுதான் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்த நிலையை அடையவேண்டும் ஒழுக்க நிலை பேணி காக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். முதல் அமைச்சரின் இந்த நல்ல எணணத்தை நிறைவேற்றவேண்டியது மாணவர்களின் கடமை. இவ்வாறு நீதிமன்னன் பேசினார். விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில் குமார், செந்தமிழ்செல்வன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மதியழகன், நகர அதிமுக துனைசெயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் முத்துகிருஷ்ணன், முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம்வகுப்பு படிக்கும் 247 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டன. விழாவிற்குபள்ளி தலைமை ஆசிரியர் விசுவநாதன் தலைமைதாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.எஸ். ஆர்.தங்கராசு, பொருளாளர் ஞானசேகரன் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மருதைமணிஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் நீதிமன்னன் சைக்கிள்களை வழங்கி பேசியதாவது.
கடந்ததடவை ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்தபோது வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத வகையில் இந்தியாவிலேயே முதல்தடவையாக மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். கிராமபுற மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை இருந்த போதுதான் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்த நிலையை அடையவேண்டும் ஒழுக்க நிலை பேணி காக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். முதல் அமைச்சரின் இந்த நல்ல எணணத்தை நிறைவேற்றவேண்டியது மாணவர்களின் கடமை. இவ்வாறு நீதிமன்னன் பேசினார். விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில் குமார், செந்தமிழ்செல்வன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மதியழகன், நகர அதிமுக துனைசெயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் முத்துகிருஷ்ணன், முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக