உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 27, 2012

கடலூர் மாவட்டத்தில் 63-வது குடியரசு தினம் கொண்டாட்டம்

கடலூர்: 

        கடலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகம், பள்ளி, நிறுவனங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

          கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி உத்திராபதி தேசிய கொடியை ஏற்றினார். நீதிபதிகள் முருகன், சண்முகநாதன், செல்வநாதன், நர்சீர்பானு, மாஜிஸ்திரேட் சுகந்தி பங்கேற்றனர்.

          கடலூர் நகராட்சியில் சேர்மன் சுப்ரமணியன் தேசிய கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் குமார், கமிஷனர் விஜயக்குமார் பங்கேற்றனர். 

           கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் மணிமேகலை, 

          மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா, 

        காங்., அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன், செல்லஞ்சேரி, 

             காரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஊராட்சி தலைவர் தங்கவேலு ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

          தேவனாம்பட்டினம் நகராட்சி பள்ளியில் தலைவர் கடல் நாகராஜன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். 

        நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேர்மன் சுதாகர்,  வரக்கால்பட்டு சாந்த சூரி காளி பராதி அங்காளம்மன் கோவிலில் நிறுவனர் பன்னீர்செல்வம், 

          எழுமேடு பள்ளியில் ஊராட்சித் தலைவர் குமுதவல்லி, 

         டேனிஷ்மிஷன் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் அன்பு ஐ இன்பராஜ் ஆகியோர் தேசிய கொடியேற்றினர்.

பண்ருட்டி நகராட்சி 

         அலுவலகத்தில் சேர்மன் பன்னீர்செல்வம் தலைமையில் கமிஷனர் அருணாசலம் தேசிய கொடி ஏற்றினார். 

          ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., துரை தலைமையில், சேர்மன் மாலதி தேசிய கொடியேற்றினார்.
 
           அன்னை வேளாங்கண்ணி  பாலிடெக்னிக்கில் சிறுவத்தூர் பள்ளி ஆசிரியர் ரத்தின ஆறுமுகம், 

         பாலவிகார் பள்ளியில் முதல்வர் லோகநாதன், 

      புனித அன்னாள் பொறியியல் கல்லூரியில் முதல்வர் கணபதி, 

      அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சுந்தரி,

      அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் புலமுதல்வர் செந்தில்குமார் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

        நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜானகிராமன், 

         சி.என்.பாளையம் அரசு பள்ளியில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மயிலை குருஜி ஆங்கிலப் பள்ளியில் நிர்வாகி முருகவேல் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர். 

சிதம்பரம்: 

           நகராட்சியில் சேர்மன் நிர்மலா, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., இந்துமதி, நகர போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சதீஷ், 

          அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராமநாதன் ஆகியோர் தேசிய கொடியேற்றினர்.

        ஆறுமுக நாவலர் பள்ளியில் ஹாஜி முகம்மது யாசின், பச்சையப்பன் பள்ளியில் முதுகலை ஆசிரியை கலாவதி, வீனஸ் பள்ளி, 

         காமராஜர் பள்ளியில் சேர்மன் நிர்மலா, காமராஜ் சிறப்புப் பள்ளியில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறைத் தலைவர் கதிரேசன், 

           முஸ்தபா பள்ளியில் ஊராட்சி தலைவர் ஷபிபுன்னிசா அய்யூப், 

          தில்லை மெட்ரிக் பள்ளியில் மிட்டவுன் ரோட்டரி தலைவர் ரவிச்சந்திரன், 

          கீழச்சாவடியில் சேர்மன் அசோகன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

          காட்டுமன்னார்கோவில் அடுத்த பூவிழந்தநல்லூர் ஊராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் முகமது எகையா தேசிய கொடி ஏற்றினார்.
 

           விருத்தாசலம்: ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தேசிய கொடியேற்றினார். தாசில்தார் பிரபாகரன் பங்கேற்றார். 

          நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் அரங்கநாதன் தேசிய கொடியேற்றினார். கமிஷனர் மணிவண்ணன் உடனிருந்தார்.

          எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முத்துக்குமார் எம்.எல்.ஏ., கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதல்வர் கலாவதி கொடியேற்றினர். 

           மாணவர் விடுதியில் உடற்கல்வி ஆசிரியர் கவாஸ்கர், இன்பேன்ட் பள்ளியில் முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன்,

           அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகேசன், பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் சித்தார்தன், 

          புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் தலைமை ஆசிரியர் அதிசயராஜன், காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சீராளன் தேசிய கொடியேற்றினர்.

            பெரியகண்டியங்குப்பத்தில் கவுன்சிலர் ராஜ்குமார், 

           புதுக்கூரைப்பேட்டையில் புதுச்சேரி பலநோக்கு சமூக சேவா சங்க தலைவர் ஜோதி, 

           சிறுவம்பார் காலனி ஊராட்சி பள்ளியில் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜன், 

           திரு.வி.க., நகர் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் டேவிட்லாசர், 

           பூதாமூர் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மீனாம்பிகை, 

           தென்கோட்டைவீதி நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் தாரா தேசிய கொடி ஏற்றினர்.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior