உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 27, 2012

டான்செட் 2012 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

       அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் டான்செட்-2012 தேர்வெழுத விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
 
          தமிழகத்தில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,. எம்.பிளான்., ஆகிய முதுநிலைப் படிப்புகளில் இந்த டான்செட் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தே சேர்ககை வழங்கப்படுகிறது. 
 
          தகுதி உள்ள மாணவர்கள், விண்ணப்பத்துடன் நுழைவுத் தேர்வுக் கட்டணமாக ரூ.500ஐ (எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. மாணவர்கள் ரூ.250) செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை செலுத்தும் மாணவர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா ரூ.500 அல்லது 250ஐ ஒரே டிடியாக எடுத்தும் அனுப்பலாம். மாணவர்கள் டிடி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் அண்ணா பல்கலையின் மையங்களில் நேரடியாக வந்து தங்கள் பெயரை பதிவு செய்து அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
         அல்லது அண்ணா பல்கலையின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து டிடி மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அண்ணா பல்கலைக்கு பிப்ரவரி மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்பலாம். இந்த மாணவர்களுக்கு அனுமதிச் சீட்டும் தபாலில் அனுப்பி வைக்கப்படும். 
 
          எம்.பி.ஏ. படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையும்,
 
      எம்.சி.ஏ. படிப்பிற்கு மார்ச் மாதம் 31ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
 
       எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். 
 
 
 
 
 இணையதளம் 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior