உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 29, 2012

சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்


சிதம்பரம் :

       சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி என்.எஸ்.எஸ்., அரிமா சங்கம், சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

      கல்லூரியில் நடந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பழனிவேல், அரிமா ஆளுனர் கல்யாண்குமார், மாவட்டத் தலைவர் நாகப்பன், அரிமா சங்கத் தலைவர் ரமேஷ்சந்த், கல்லூரி நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிவக்குமார், பிரேம்குமார் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை என். எஸ்.எஸ்., அலுவலர்கள் அப்பர்சாமி, பாலசுந்தரம் செய்திருந்தனர்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior