உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 29, 2012

வாழைச் சாகுபடியில் புதிய சேமிப்பு முறைகள்


பதப்படுத்தப்படும் வாழைப்பழங்கள். பேக் செய்யப்பட்ட பழங்கள்.
சிதம்பரம்: 

           வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டு தாவரங்களைக் கொண்ட பேரினமாகும். உலகம் முழுவதும் வாழையின் தேவை வெகுவாக அதிகரித்து வருகிறது. சுமார் 9.6 மில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ள வாழை சந்தையில் நமது பங்களிப்பு 0.01 சதவீதம்தான்.
 
       கடந்த 2003-04-ல் வாழைப் பழங்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.11 கோடியில் இருந்து 2007-08ல் ரூ.26 கோடி ரூபாயாக உயர்ந்து, கடந்த ஆண்டு ரூ.55 கோடி வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சியம் தெரிவிக்கிறது. இந்நிலையில் வாழைப்பழத்தை புதிய முறையில் நீண்ட நாள்கள் கெடாமல் பதப்படுத்தி வாழை விவசாயிகள் ஏற்றுமதி செய்து அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.

         இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் வாழையின் தேவை அதிகம் உள்ளதால், ஏற்றுமதியில் கவனம் இல்லை எனக் கூறப்பட்டாலும், உலக சந்தையில் 2015-ம் ஆண்டுக்குள் நமது பங்கை இரண்டு சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்குண்டான விரிவாக்க முயற்சிகள் தொடர்கின்றன தேசிய தோட்டக்கலை மிஷன் (சஏங) சில முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் ஆண்டொன்றுக்கு வாழை சாகுபடி 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது.
 
           2007-ல் 6,04,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வாழை 21 மில்லியன் டன் விளைச்சலைக் கொடுத்தது. இப்போது சாகுபடி பரப்பளவு 7,80,000 ஹெக்டேராக அதிகரித்து, விளைச்சலும் 27 மில்லியன் டன்களை தாண்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நேந்திரன், ரஸ்தாளி, பூவன், ரோபஸ்டா, சினிசம்பா, செவ்வாழை போன்ற பல ரகங்கள் பயிரிடப்பட்டாலும், அவற்றின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை தேவைகளை சந்திக்க புதிய சேமிப்பு முறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

புதிய சேமிப்பு முறைகள்:

 வாழைப் பழங்களை உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய புதிய சேமிப்பு முறைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 மாறுபட்ட சூழலில் சேமிப்பு முறை: 

       வாழைப் பழங்களைப் பாதுகாக்க இந்த சேமிப்பு முறையில் மிகவும் குறைந்தளவு குளிரில் சேமிக்கப்படுகிறது. சுமார் 90 நாள்கள் வரை வாழைப் பழங்கள் இம்முறையில் பாதுகாக்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய முடியும்.

         கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சேமிக்கும் முறை: வாழை கட்டுப்படுக்தப்பட்ட சூழல் பாதுகாப்பு முறைக்கு மிகவும் உகந்ததாகக் காணப்படுகிறது. இப்பாதுகாப்பு முறையில் வாழைப் பழங்களின் பழுக்கும் தன்மை மற்றும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வெகுவாக கெடும் சூழல் குறைக்கப் படுகிறது. எனவே வாழை ஏற்றுமதியின்போது நீண்ட கடல் பயணத்தின்போதுகூட கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு முறையில் பழுக்காத வாழைப் பழங்களை 75 நாள்கள் வரை சேமித்து வைக்க முடியும், பின்னர் தகுந்த சூழலில் வைத்தால் 4 முதல் 5 நாள்களில் நன்றாக பழுக்க வைக்க முடியும்.

 
         இவ்வாறு இப்புதிய சேமிப்பு முறைகள் வாயிலாக வாழைப் பழத்தை சேமித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை தேவைகளை நிறைவு செய்து வாழை விவசாயிகள் மற்றும் வாழை வியாபாரிகள் அதிகளவு லாபம் அடைய முடியும் என்கிறார் முனைவர் தி.ராஜ்பிரவீன்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior