உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 29, 2012

கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி


விருத்தாசலம் :

     கம்ப்யூட்டர் பயிற்சிக்கான இளைஞர்கள் தேர்வு முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு புதுவாழ்வு திட்டம், மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் நோக்கத்துடன் விருத்தாசலம் பூதாமூர் சூரியா ஐ.டி.ஐ., யில் பயிற்சிக்கான இளைஞர்கள் தேர்வு முகாமை நடத்தியது.


      முகாமிற்கு புதுவாழ்வு திட்ட மேலாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார்.  முகாமில் சி.எஸ்.சி., அப்பல்லோ கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பயிற்சிக்கான இளைஞர்களைத் தேர்வு செய்தனர். முகாமில் விருத்தாசலம், நல்லூர், காட்டுமன்னார்கோவில், மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 565 பேர் பங்கேற்றனர். உதவித் திட்ட அலுவலர் சக்திவேல், உதவித் திட்ட மேலாளர்கள் நாராயணசாமி, நாராயணன், மணிவண்ணன், கலைவாணி மற்றும் ஒன்றிய அணி தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior