உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




Neyveli Book Fair லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Neyveli Book Fair லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 07, 2011

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் திரைப்பட இயக்குநர் பிரபுசாலமன் பங்கேற்பு


நெய்வேலி:
 
            நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் 7-ம் நாளான வியாழக்கிழமை திரைப்பட இயக்குநர் பிரபுசாலமன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.  தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய குறும்படப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கி கெüரவிக்கிறார்.  என்எல்சி மின்துறை இயக்குநர் ஜே.மகிழ்செல்வன் தலைமை தாங்குகிறார். திருநெல்வேலி எழுத்தாளர் மதுரா பாராட்டப்படவுள்ளார். விஜய் டிவி புகழ் கோபிநாத் பங்கேற்கும் இன்றைய கல்வி-பெற்றோர் படுத்தும் பாடு எனும் தலைப்பில் சிறப்புரை நடைபெறவுள்ளது.
 
 
 
 
 
 

Read more »

திங்கள், ஜூலை 04, 2011

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் மாணவர்களை ஊக்குவிக்க உடனடித் திறனறிதல் போட்டி

 நெய்வேலி:

             நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் என்.எல்.சி. கல்வித் துறை சார்பில் உடனடித் திறனறிதல் போட்டி நடத்தப்பட்டு, உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி பள்ளி மாணவ, மாணவியரை வெகுவாக கவர்ந்துள்ளது.

               புத்தகக் கண்காட்சியை காணவரும் பள்ளி மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக என்.எல்.சி. கல்வித் துறை உடனடித் திறனறிதல் போட்டியை நடத்தி வருகிறது. இதற்காக நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையை வழங்கி, 10 தினங்களுக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசை வழங்கி வருகிறது. அதன்படி புத்தகக் கண்காட்சியின் முதல்நாளான வெள்ளிக்கிழமை 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிருக்கிடையே இரு பிரிவுகளாக கவிதைப் போட்டிகளை நடத்தியது.

இதில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் 

முதல் பரிசு  எ.கல்கிப்ரியாவுக்கும், 
2-ம் பரிசு என்.அக்ஷ்யாவுக்கும், 
3-ம் பரிசு ஆர்.ரஞ்சித்குமாருக்கும் வழங்கப்பட்டது.

இது தவிர 

எ.அருள்மார்ட்டீன் ராஜா, 
கே.ஆர்.கார்த்திகா,
ஆர்.ஸ்ரீகாந்த், 
வி.வினோத், 
ஜே,கிரிதரன் ஆகிய 5 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

இதேபோன்று 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் 

முதல்பரிசு ஆர்.அபிராஜுக்கும்,
2-ம் பரிசு பி.கீர்த்தனாவுக்கும், 
3-ம் பரிசு ஜி.எஸ்.சங்கமிக்கும்  வழங்கப்பட்டது.

இது தவிர பி.வீரமணி, ஏ.ஆஷிஷ், எஸ்.ஜெயஷ்குமார், எம்.தீபக்ராஜ், டி.ராஜேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை என்.எல்.சி. கல்வித் துறையைச் சேர்ந்த கூடுதல் முதன்மை மேலாளர் ஜோதிக்குமார் முன்னின்று செய்துவருகிறார்.





Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் மருத்துவ சேவை: மக்களிடையே பெரும் வரவேற்பு

நெய்வேலி : 

            நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும், குறிப்பாக 40 வயதை கடந் தவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் உயர்ரக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

                    ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, எய்ட்ஸ் போன்ற அனைத்து விதமான நோய்கள் குறித்தும் நவீன மருத்துவ கருவிகள் மூலம் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு உடனுக்குடன் பரிசோதனை முடிவுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. என்.எல்.சி., பொது மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி சண்முகசுந்தரம், உள்துறை மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஜனார்த்தனம், பொது மருத்துவ நிபுணர் சுப்ரமணியம், ரத்த பரிசோதனை துறை நிபுணர் பிரகாஷ் என அனைத்து சிறப்பு பிரிவு களின் டாக்டர்களும் மாலை 6 மணி முதல் அரங்க வளாகத்திற்குள்ளேயே முகாமிட்டு நோய் வராமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சைக்கான வழிமுறைகளையும் வழங்கி வருகின்றனர். 

         புத்தகக் கண்காட்சியில் என்.எல்.சி.,யின் இந்த மருத்துவ சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சி அகில இந்திய அளவில் முதன்மையானதாக வரும்: கலெக்டர் அமுதவல்லி நம்பிக்கை

  நெய்வேலி

              நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் 11-வது வட்டம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் 14-வது புத்தகக் கண்காட்சி நடந்தது. விழாவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.   
 
 அப்போது கடலூர் மாவட்ட கலெக்டர் பேசியது:-

            நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் நடத்தும் இந்த புத்தகக் கண்காட்சி தமிழக அளவில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. அடுத்த முறை இந்த புத்தகக் கண்காட்சி இந்தியாவில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் முதன்மையான புத்தகக் கண்காட்சியாக மாறும்.  புத்தகம் படிக்கும் பழக்கத்தை இளமைப்பருவம் முதலே தொடங்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். கிராமப்புற ஏழை- எளியவர்களும் குறைந்த விலையில் தரமான புத்தகங்கள் கிடைக்க வழிவகை அமைத்துக் கொடுத்துள்ள என்.எல்.சி. நிறுவனத்தை மனதார பாராட்டுகிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

                     நிகழ்ச்சியில் மாற்று முறை மருத்துவங்கள் என்ற நூலின் ஆசிரியர் டாக்டர் ரேவதிக்கு கலெக்டர் கேடயம் மற்றும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். நிதித்துறை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். டாக்டர் ரேவதியின் மாற்று முறை மருத்துவ நூலை மாவட்ட கலெக்டர் வெளியிட தலைமை விருந்தினர் சேகர் பெற்றுக் கொண்டார். கங்காராணி பதிப்பகத்தாரை கவுரவித்து பேசினார். தொடக்கத்தில் ஜெயச்சந்திரன் வரவேற்றார். உஷா நன்றி கூறினார். 
 
 
 

Read more »

சனி, ஜூலை 02, 2011

14வது நெய்வேலி புத்தகக் கண்காட்சித் தொடக்கம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJjRSL8MfAYCF5J9Yq4W2HQKfqmNigP8fqjCv7Acp8QDYJ6wVO_FAJt3DEiDKW2MqqhBRDEtj5Bs0LatUksRokMcTryMI5c5YRRUP3ttyKi5ePwsyo2ON_ViGjTA_BZoODLXpU4T29sQDZ/s320/NeyveliBookfair.png


நெய்வேலி : 

          ""இந்தியாவிற்கே ஒளியேற்றி வரும் என்.எல்.சி., நிறுவனம் புத்தகக் கண்காட்சி வாயிலாக அறிவு தீபத்தையும் ஏற்றி வருகிறது'' என சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் பேசினார். 

           என்.எல்.சி., சார்பில் நெய்வேலியில் நேற்று துவங்கிய 14வது புத்தகக் கண்காட்சியை சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, புத்தக கண்காட்சி குழுத் தலைவரும் சுரங்க இயக்குனருமான சுரேந்தர் மோகன், இயக்குனர்கள், சரத்குமார் ஆச்சாரியா, கந்தசாமி, சேகர், மகிழ்செல்வன் ஆகியோருடன் அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவில் சேர்மன் அன்சாரி பேசுகையில், 

              "ஒவ்வொரு குடும்பத் தலைவியும் தனது குழந்தைகளை வெறும் படிப்பாளிகளாக மட்டுமல்லாமல், சிறந்த படைப்பாளிகளாகவும் உருவாக்க வேண்டும். விவேகானந்தர், நேரு போன்ற தலைவர்களின் சுயசரிதைகளை படிக்கச் செய்ய வேண்டும். புத்தகங்கள் படிப்பதன் வாயிலாக எதிர்கால சந்ததியினரை சிறந்த சமுதாயம் கொண்ட அமைப்பாக உருவாக்க முடியும்' என்றார்.


சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் பேசியது: 

               இந்தியாவிற்கே ஒளி ஏற்றி வரும் என்.எல்.சி., இந்த புத்தகக் கண்காட்சி வாயிலாக அறிவு தீபத்தையும் ஏற்றி வருகிறது. இந்த காலத்தில் புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் நமது சந்ததியினரிடையே குறைந்து கொண்டே செல்கிறது. அது மாற வேண்டும். "டிவி' பார்ப்பதிலும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதிலுமே நேரத்தை வீணடிக்கக் கூடாது. பழைய நூல்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. இவற்றை பழைய புத்தகக் கடைகளில் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது. இது மாற வேண்டும். கல்வியில் பாகுபாடு இருக்க கூடாது. கல்வி எல்லோருக்கும் பொதுவானது. இவ்வாறு நீதிபதி மதிவாணன் பேசினார்.






Read more »

வெள்ளி, ஜூலை 01, 2011

14வது நெய்வேலி புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்

           நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் 3வது இடத்தையும், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இடத்திலும் உள்ளது.

          ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரபல பதிப்பாளர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆன்மிகம், அறிவியல், கலை, வரலாறு, சமையல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களும் இதில் இடம் பெறுகிறது. நெய்வேலி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும், மாணவர்களும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு, வாங்கிச்செல்கின்றனர்.

              தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில் மாணவர்கள், சிறுவர்களை கவரும் விதத்தில் விளையாட்டுகளும், அறிவியல் அரங்கங்களும் அமைக்கப்படும்.  இந்நிலையில் 14வது ஆண்டு புத்தக கண்காட்சி இன்று  ஜூலை 1 மாலை நெய்வேலி வட்டம் 11ல் உள்ள புத்தக கண்காட்சி திடலில் துவங்குகிறது. என்எல்சி நிறுவன தலைவர் அன்சாரி தலைமை தாங்குகிறார்.

           சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மதிவாணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைக்கிறார். சுரங்கத்துறை இயக்குனர் சுரேந்தர்மோகன் வாழ்த்துரை வழங்குகிறார். பண்ருட்டி நகராட்சி முன்னாள் சேர்மன் பஞ்சவர்ணம் சிறந்த எழுத்தாளராக பாராட்டு பெறுகிறார். அவர் எழுதிய பிரபஞ்சங்களும் தாவரங்களும் என்ற புதிய நூல் வெளியிடப்படுகிறது.

            கண்காட்சியில் தினமும் ஒரு எழுத்தாளரும், பதிப்பாளரும் பாராட்டப்படுவார்கள். மேலும் புதிய நூல்களும் வெளியிடப்படுகிறது. நெய்வேலி எழுத்தாளர்களின் சிறுகதை, கவிதை தொகுப்புகள் வெளியிடப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா, பார்வையாளர்களுக்கு உடனடி திறன்போட்டியும் நடத்தப்படுகிறது.

                ரூ. 95 ஆயிரம் அளவுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இதுதவிர குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. புகழ்பெற்ற கலைஞர்களின் நாடகம், பட்டிமன்றம், இலக்கிய பேருரைகள், இசை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. கண்காட்சி தினமும் காலை 11 மணிவரை இரவு 9 மணிவரை திறந்திருக்கும். கண்காட்சியை முன்னிட்டு உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விழா ஏற்பாடுகளை என்எல்சி புத்தக கண்காட்சி குழுவினர் செய்து வருகின்றனர்.





 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior