உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் மருத்துவ சேவை: மக்களிடையே பெரும் வரவேற்பு

நெய்வேலி : 

            நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும், குறிப்பாக 40 வயதை கடந் தவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி என்.எல்.சி., பொது மருத்துவமனை சார்பில் உயர்ரக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

                    ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, எய்ட்ஸ் போன்ற அனைத்து விதமான நோய்கள் குறித்தும் நவீன மருத்துவ கருவிகள் மூலம் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு உடனுக்குடன் பரிசோதனை முடிவுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. என்.எல்.சி., பொது மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி சண்முகசுந்தரம், உள்துறை மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் ஜனார்த்தனம், பொது மருத்துவ நிபுணர் சுப்ரமணியம், ரத்த பரிசோதனை துறை நிபுணர் பிரகாஷ் என அனைத்து சிறப்பு பிரிவு களின் டாக்டர்களும் மாலை 6 மணி முதல் அரங்க வளாகத்திற்குள்ளேயே முகாமிட்டு நோய் வராமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சைக்கான வழிமுறைகளையும் வழங்கி வருகின்றனர். 

         புத்தகக் கண்காட்சியில் என்.எல்.சி.,யின் இந்த மருத்துவ சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior