உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் மாணவர்களை ஊக்குவிக்க உடனடித் திறனறிதல் போட்டி

 நெய்வேலி:

             நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் என்.எல்.சி. கல்வித் துறை சார்பில் உடனடித் திறனறிதல் போட்டி நடத்தப்பட்டு, உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி பள்ளி மாணவ, மாணவியரை வெகுவாக கவர்ந்துள்ளது.

               புத்தகக் கண்காட்சியை காணவரும் பள்ளி மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக என்.எல்.சி. கல்வித் துறை உடனடித் திறனறிதல் போட்டியை நடத்தி வருகிறது. இதற்காக நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையை வழங்கி, 10 தினங்களுக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசை வழங்கி வருகிறது. அதன்படி புத்தகக் கண்காட்சியின் முதல்நாளான வெள்ளிக்கிழமை 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிருக்கிடையே இரு பிரிவுகளாக கவிதைப் போட்டிகளை நடத்தியது.

இதில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் 

முதல் பரிசு  எ.கல்கிப்ரியாவுக்கும், 
2-ம் பரிசு என்.அக்ஷ்யாவுக்கும், 
3-ம் பரிசு ஆர்.ரஞ்சித்குமாருக்கும் வழங்கப்பட்டது.

இது தவிர 

எ.அருள்மார்ட்டீன் ராஜா, 
கே.ஆர்.கார்த்திகா,
ஆர்.ஸ்ரீகாந்த், 
வி.வினோத், 
ஜே,கிரிதரன் ஆகிய 5 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன.

இதேபோன்று 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் 

முதல்பரிசு ஆர்.அபிராஜுக்கும்,
2-ம் பரிசு பி.கீர்த்தனாவுக்கும், 
3-ம் பரிசு ஜி.எஸ்.சங்கமிக்கும்  வழங்கப்பட்டது.

இது தவிர பி.வீரமணி, ஏ.ஆஷிஷ், எஸ்.ஜெயஷ்குமார், எம்.தீபக்ராஜ், டி.ராஜேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை என்.எல்.சி. கல்வித் துறையைச் சேர்ந்த கூடுதல் முதன்மை மேலாளர் ஜோதிக்குமார் முன்னின்று செய்துவருகிறார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior