உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

நெய்வேலி புத்தகக் கண்காட்சி அகில இந்திய அளவில் முதன்மையானதாக வரும்: கலெக்டர் அமுதவல்லி நம்பிக்கை

  நெய்வேலி

              நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் 11-வது வட்டம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் 14-வது புத்தகக் கண்காட்சி நடந்தது. விழாவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.   
 
 அப்போது கடலூர் மாவட்ட கலெக்டர் பேசியது:-

            நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் நடத்தும் இந்த புத்தகக் கண்காட்சி தமிழக அளவில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. அடுத்த முறை இந்த புத்தகக் கண்காட்சி இந்தியாவில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் முதன்மையான புத்தகக் கண்காட்சியாக மாறும்.  புத்தகம் படிக்கும் பழக்கத்தை இளமைப்பருவம் முதலே தொடங்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். கிராமப்புற ஏழை- எளியவர்களும் குறைந்த விலையில் தரமான புத்தகங்கள் கிடைக்க வழிவகை அமைத்துக் கொடுத்துள்ள என்.எல்.சி. நிறுவனத்தை மனதார பாராட்டுகிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

                     நிகழ்ச்சியில் மாற்று முறை மருத்துவங்கள் என்ற நூலின் ஆசிரியர் டாக்டர் ரேவதிக்கு கலெக்டர் கேடயம் மற்றும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். நிதித்துறை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். டாக்டர் ரேவதியின் மாற்று முறை மருத்துவ நூலை மாவட்ட கலெக்டர் வெளியிட தலைமை விருந்தினர் சேகர் பெற்றுக் கொண்டார். கங்காராணி பதிப்பகத்தாரை கவுரவித்து பேசினார். தொடக்கத்தில் ஜெயச்சந்திரன் வரவேற்றார். உஷா நன்றி கூறினார். 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior