உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

கனமழையால் மோசமான சிதம்பரம் சாலைகள்

சிதம்பரம்,நவ.6:

கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழையினால் சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.
புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்ட பணிகள் நடைபெற உள்ளது எனக்கூறி நகராட்சி நிர்வாகம் கடந்த ஓராண்டாக நகரில் உள்ள எந்த தார்சாலைகளையும் போடவில்லை. இதனால் அனைத்து சாலைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக நீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் பல்வேறு சாலைகளில் புதைசாக்கடைநீர் உடைப்பெடுத்து மழைநீருடன் கலந்து குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் நகரில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கொசுக்கள் அதிகரித்துள்ளதால் நகரில் விஷக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நகராட்சி சுகாதாரத்துறை தற்காப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என பாட்டாளி மக்கள் நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் புகார் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior