உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 16, 2009

21-ல் சட்​டப்​பே​ரவை மதிப்​பீட்​டுக் குழு கட​லூர் வருகை

கடலூர்,​​ ​ டிச.15: ​ ​

                  சட்​டப்​பே​ரவை மதிப்​பீட்​டுக் குழு இம்​மா​தம் 21-ம் தேதி கட​லூர் வரும் என்று மாவட்ட ஆட்​சி​யர் ப.சீதா​ரா​மன் செவ்​வாய்க்​கி​ழமை அறி​வித்​தார்.​

   இது குறித்து ஆட்​சி​யர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

                       குத்​தா​லம் க.அன்​ப​ழ​கன் தலை​மை​யி​லான ​ தமிழ்​நாடு ​ சட்​டப்​பே​ரவை மதிப்​பீட்​டுக் குழு ​ 21-ம் தேதி கட​லூர் மாவட்​டத்​துக்கு வருகை தந்து,​​ ஆய்​வு​களை மேற்​கொள்ள இருக்​கி​றது.​ இதிóல் நிதி அமைச்​சர் க.அன்​ப​ழ​கன்,​​ பொதுக் கணக்​குக் குழுத் தலை​வர் க.சிவ​ராஜ்,​​ பொது நிறு​வ​னங்​கள் குழுத் தலை​வர் டி.யசோதா உள்​ளிட்​டோர் உறுப்​பி​னர்​க​ளக உள்​ள​னர்.​

                      இக்​குழு கட​லூர்,​​ பண்​ருட்டி,​​ நெல்​லிக்​குப்​பம் பகு​தி​க​ளில் உணவு மற்​றும் நுகர்​வோர் பாது​காப்பு,​​ ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள்,​​ ​ அரசு மருத்​து​வ​ம​னை​கள்,​​ ​ மருந்​த​கங்​கள்,​​ தொடக்​கப் பள்​ளி​கள்,​​ நடு​நி​லைப் பள்​ளி​கள்,​​ உயர்​நி​லைப் பள்​ளி​கள்,​​ மேல்​நி​லைப் பள்​ளி​கள்,​​ மாவட்ட நிர்​வா​கம்,​​ வரு​வாய்த்​துறை,​​ வளர்ச்​சிப் பணி​கள் ஆகிய பணி​கள் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளும்.​  அன்று மாலை கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் உள்ள கூட்ட அரங்​கில் மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் மாவட்ட அள​வி​லான அலு​வ​லர்​கள் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெ​றும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior