உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 16, 2009

என்​எல்சி ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​கள் நிரந்தரம் மத்​திய அமைச்​ச​ரி​டம் எம்.பி. மனு

நெய்வேலி,​​ டிச.​ ​ 15:​

                     என்​எல்​சி​யில் 20 ஆண்​டுக்​கும் மேலாக பணி​பு​ரிந்​து​வ​ரும் ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​களை பணி​நி​ரந்​த​ரம் செய்ய வலி​யு​றுத்தி கட​லூர் எம்.பி.​ கே.எஸ்.அழ​கிரி மத்​திய அமைச்​சர் ஜெயப்​பி​ர​காஷ் ஜெய்ஸ்​வாலை சந்​தித்து மனு அளித்​துள்​ளார்.​ க​ட​லூர் மாவட்ட ஐஎன்​டி​யுசி தலை​வர் ஆர்.நல்​லு​சாமி,​​ மாவட்ட காங்​கி​ரஸ் செய​லர் சுகு​மார்,​​ பொறி​யா​ளர் தெய்​வ​நீதி,​​ என்​எல்சி ஒபிசி சங்​கத் தலை​வர் வி.என்.புரு​ஷோத்​த​மன்,​​ என்​எல்சி ஒப்​பந்​தத் தொழி​லா​ளர் மற்​றும் இன்கோ-​சர்வ் சங்க தலை​வர் கே.பர​ம​சி​வம் உள்​ளிட்​டோர் கட​லூர் எம்பி கே.எஸ்.அழ​கிரி தலை​மை​யில் கடந்த 9-ம் தேதி மத்​திய நிலக்​க​ரித்​துறை அமைச்​சர் ஜெயப்​பி​ர​காஷ் ஜெய்ஸ்​வாலை சந்​தித்து மனு அளித்​த​னர்.​ மனு விவ​ரம்:​

                                என்​எல்சி நிறு​வ​னத்​தில் 20 ஆண்​டுக்கு மேலாக பணி​பு​ரிந்த சுமார் 200 பேரை பணி​நி​ரந்​த​ரம் செய்​ய​வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​த​ர​விட்​டுள்​ளது.​ இதை எதிர்த்து நிர்​வா​கம் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​மு​றை​யீடு செய்​துள்​ள​தால்,​​ அவர்​கள் பணி​நி​ரந்​த​ரம் செய்​யப்​ப​டா​மல் தொடர்ந்து ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​க​ளா​கவே பணி​பு​ரிந்து வரு​கின்​ற​னர்.​ நிர்​வா​கம் தொடுத்​துள்ள மேல்​மு​றை​யீட்டு மனுவை சம​ரச முயற்சி மேற்​கொண்டு,​​ வாபஸ் பெறச்​செய்து அவர்​களை நிரந்​த​ரம் செய்ய வேண்​டும்.​ மே​லும் நிறு​வ​னத்​தின் சார்​பில் இயங்​கி​வந்த கரி​கட்டி மற்​றும் உர ஆலை​கள் மூடப்​பட்​ட​தைத் தொடர்ந்து அங்கு பணி​யாற்​றிய ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​க​ளுக்கு,​​ நிறு​வ​னத்​தின் விரி​வாக்​கப் பணி​க​ளில் வேலை​வாய்ப்பு வழங்க வேண்​டும்.​ 16-06-08 அன்று மத்​திய அமைச்​சர் முன்​னி​லை​யில் ஏற்​ப​டுத்​தப்​பட்ட ஒப்​பந்​தத்​தின்​படி 5 ஆயி​ரம் ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​களை சொசைட்​டி​யில் இணைக்க வேண்​டும்.​ நெய்வேலி ஜவ​கர் அறி​வி​யல் கல்​லூ​ரி​யில் பயி​லும் இதர பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்கு கட்​ட​ணச் சலுகை வழங்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கை​கள் அடங்​கிய மனுவை அளித்​த​னர்.​ இ​தைப் பரிசீ​லித்த அமைச்​சர் ஜெயப்பிரகாஷ் ஜெய்ஸ்​வால்,​​ இது​கு​றித்து நிறு​வ​னத் தலை​வ​ரி​டம் பேசு​வ​தா​க​வும்,​​ ஜன​வரி மாதம் நெய்வேலி வரும்​போது,​​ இப்​பி​ரச்​னைக்கு தீர்வு காணப்​ப​டும் என உறு​தி​ய​ளித்​தி​ருப்​ப​தாக மாவட்ட ஐஎன்​டி​யுசி தலை​வர் ஆர்.நல்​லு​சாமி தெரி​வித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior