உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 16, 2009

மழைக்கு ஒதுங்க முடியாத பஸ் நிலையம்

பண்ருட்டி,​ டிச. 15: ​

                    மழைக்​குக் கூட பய​ணி​கள் ஒதுங்கி நிற்க இட​மில்​லாத அவல நிலை​யில் பண்​ருட்டி பஸ் நிலை​யம் உள்​ளது.​ இதன் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற பல முறை வலி​யு​றுத்​தி​யும் நகர நிர்​வா​கம் செவி சாய்க்​க​வில்லை என பய​ணி​கள் வேத​னை​யு​டன் தெரி​வித்​த​னர்.​ க ​ட​லூர் மாவட்​டத்​தில் பண்​ருட்​டி​யில் முந்​திரி ஏற்​று​மதி நிறு​வ​னங்​கள்,​​ மளி​கைப் ​ பொருள்​கள் மொத்த வியா​பார கடை​கள் உள்​ளிட்ட முக்​கிய கடை​கள் இயங்கி வரு​கின்​றன.​÷இ​த​னால் நாள் ஒன்​றுக்கு சுமார் ஆயி​ரக்​க​ணக்​கான மக்​கள் வெளி ஊர்​க​ளில் இருந்து ​ வியா​பார விஷ​ய​மாக பண்​ருட்​டிக்கு வந்து செல்​கின்​ற​னர்.​

                       மே​லும் இதனை சுற்​றி​யுள்ள நூற்​றுக்​க​ணக்​கான கிரா​மத்​தைச் சேர்ந்த மக்​கள் தங்​கள் அடிப்​படை தேவை​களை பூர்த்தி செய்​துக் கொள்ள பண்​ருட்​டிக்​கு​தான் வர வேண்​டும்.​  மே​லும் சென்னை,​​ சிதம்​ப​ரம்,​​ கும்​ப​கோ​ணம்,​​ தஞ்​சா​வூர்,​​ பேரா​வூ​ரணி,​பட்​டுக்​கோட்டை,​​ கட​லூர்,​​ புதுச்​சே​ரி​யில் இருந்து திருப்​பதி,​​ வேலூர்,​​ பெங்​க​ளூர்,​​ எர்​ணாக்​கு​ளம்,​​ கண்​ண​னூர்,​​ மேட்​டூர்,​​ சேலம்,​​ கள்​ளக்​கு​றிச்சி உள்​ளிட்ட பகு​தி​க​ளுக்கு செல்​லும் பஸ்​கள் பண்​ருட்டி வழி​யா​கத்​தான் செல்ல வேண்​டும்.​÷இ​த​னால் பண்​ருட்டி பஸ் நிலை​யம் எப்​போது பர​ப​ரப்​பா​க​வும்,​​ பய​ணி​க​ளின் கூட்​டம் அதி​க​மா​க​வும் காணப்​ப​டும்.​÷இத் ​த​கைய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பஸ் நிலை​யத்​தில் பய​ணி​கள் வச​திக்​காக அமைக்​கப்​பட்ட நிழற்​குடை இடத்தை தரைக் கடைக்​கா​ரர்​கள் ஆக்​கி​ர​மித்து பழக்​க​டை​கள் வைத்​துள்​ள​னர்.​

                  இ​த​னால் பய​ணி​கள் நிற்​கவோ,​​ அம​ரவோ இட​மின்றி கஷ்​டப்​பட்டு வரு​கின்​ற​னர்.​ மேலும் இக்​க​டை​க​ளால் வீசப்​ப​டும் பழக் கழி​வு​களை சாப்​பி​டு​வ​தற்​காக சுமார் 25-க்கும் ​ மேற்​பட்ட மாடு​கள் பஸ் நிலை​யத்தை சுற்றி திரிந்து வரு​கின்​றன.​
                   இ​த​னால் பஸ்​கள் குறிப்​பிட்ட இடத்​தில் நிறுத்த முடி​யாத சூழ​லும்,​​ பய​ணி​க​ளுக்கு பாது​காப்​பற்ற நிலை​யும் ஏற்​பட்​டுள்​ளது.​÷இது குறித்து பல முறை செய்​தி​கள் வெளி​யிட்​டும்,​​ நகர மன்​றக் கூட்​டத்​தில் கவுன்​சி​லர்​கள் கூறி​யும்,​​ காவல் நிலை​யத்​தில் நடை​பெற்ற போக்​கு​வ​ரத்து சீர​மைப்பு கூட்​டத்​தில் பேசி​யும் பலன் இல்லை.​

         மே​லும் நிழற்​கு​டை​யின் மத்​தி​யில் மழை நீர் செல்ல அமைக்​கப்​பட்ட தக​ரம் துருப்​பி​டித்து ஓட்​டை​கள் ஏற்​பட்​டுள்​ள​தால் மழை நீர் ஒழு​கு​கி​றது.​ இ​த​னால் மழைக் காலத்​தில் ஒழு​கும் நிழற்​கு​டை​யின் கீழ் உள்ள ஆக்​கி​ர​மிப்பு கடை​க​ளுக்​கும்,​​ சுற்​றித்​தி​ரி​யும் கால்​ந​டை​க​ளுக்கு மத்​தி​யில் ​ பய​ணி​கள் பாது​காப்​பின்றி நிற்​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​   எ​னவே பய​ணி​க​ளின் பாது​காப்​பான பய​ணத்​துக்கு நகர மற்​றும் மாவட்ட நிர்​வா​கம் உரிய நட​வ​டிக்கை எடுக்க முன்​வர வேண்​டும் என்​பதே பய​ணி​க​ளின் கோரிக்கை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior