உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 16, 2009

விவ​சா​யத் தொழி​லா​ளர்​கள் ஆர்ப்​பாட்​டம்

கடலூர்,​​ ​ டிச.15: ​ 

                    அகில இந்​திய ​ விவ​சா​யத் தொழி​லா​ளர்​கள் சங்​கத்​தி​னர் கட​லூ​ரில் செவ்​வாய்க்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ க​ட​லூர் மாவட்ட ஆதி​தி​ரா​வி​டர் மற்​றும் பழங்​கு​டி​யி​னர் நலத்​துறை சார்​பிóல் நிலம் கைய​கப்​ப​டுத்தி,​​ வீட்டு மனைப் பட்டா வழங்​கும் பணி 10 ஆண்​டு​க​ளாக வேக​மாக நடை​பெ​ற​வில்லை என்​றும்,​​ இத​னால் வீட்​டு​ம​னைப் பட்டா கோரி 25 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்​டோர் அளித்த மனுக்​கள் மீது எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​கப்​ப​ட​வில்லை என்று,​​ விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்​கம் குற்​றம் சாட்டி உள்​ளது.​  எ​னவே இத்​துறை வீட்​டு​ம​னைப் பட்டா வழங்​கும் பணியை விரைவு படுத்த வேண்​டும் என்று கோரி,​​ செவ்​வாய்க்​கி​ழமை முதல் கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் தொடர்ந்து காத்​துக் கிடக்​கும் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது.​ ​இந் நிலை​யில் திங்​கள்​கி​ழமை விவ​சா​யத் தொழி​லா​ளர்​கள் சங்க நிர்​வா​கி​களை மாவட்ட ஆதி​தி​ரா​வி​டர் மற்​றும் பழங்​கு​டி​யி​னர் நலத்​துறை அலு​வ​லர் மாவட்ட பிற்​ப​டுத்​தப் பட்​டோர் நலத்​துறை அலு​வ​லர் ஆகி​யோர் அழைத்​துப் பேசி​னர்.​ விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்க மாவட்​டத் தலை​வர் எஸ்.துரை​ராஜ்,​​ செய​லர் ரவீந்​தி​ரன்,​​ பொரு​ளா​ளர் சிவ​லிங்​கம் உள்​ளிட்​டோர் இதில் கலந்து கொண்​ட​னர்.​    

                            வி​வ​சா​யத் தொழி​லா​ளர் சங்​கம் சார்​பில் 10 ஆண்​டு​க​ளு​க​கும் மேலாக வலி​யு​றுத்​தப்​பட்டு வந்த குடி​ம​னைப் பட்டா கோரிக்​கை​கள் மீது குடி​யி​ருப்பு வாரி​யாக ஆய்வு செய்து,​​ ஒரு மாதத்​தில் தீர்வு காணப்​ப​டும் என்று கூட்​டத்​தில் உறுதி அளிக்​கப்​பட்​டது.​ எனவே செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற இருந்த காத்​துக் கிடக்​கும் போராட்​டம் ஒத்தி வைக்​கப்​பட்டு ஆர்ப்​பாட்​ட​மாக அறி​விக்​கப்​பட்​டது.​மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் நடந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு,​​ விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்க மாவட்​டச் செய​லர் த.ரவீந்​தி​ரன் தலைமை வகித்​தார்.​    ஒன்​றி​யச் செய​லர்​கள் தண்​ட​பாணி,​​ சிவ​லிங்​கம்,​​ ஸ்ரீத​ரன்,​​ ஜெய​மணி உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர்.​ மாநி​லத் தலை​வர் முன்​னாள் எம்​எல்ஏ வீரை​யன்,​​ மாநி​லப் பொரு​ளா​ளர் சி.மணி,​​ மாவட்​டத் தலை​வர் துரை​ராஜ் உள்​ளிட்​டோர் பேசி​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior